Children’s playroom launch at Perambalur All Women Police Station in Perambalur.
பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மனுக்களை கொடுக்க வரும் தாய்மார்களின் குழந்தைகளின் நேரத்தினை பயனுள்ளதாக மாற்றும் வகையில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள், அறிவை வளர்த்துக் கொள்ள சிறுகதை புத்தகங்கள் மற்றும் பழங்கள் விலங்குகள் போன்றவற்றின் புகைப்படங்கள் அடங்கிய அட்டை தொகுப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விளையாட்டு அறையை இன்று அரசு சார்பில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.கென்னடி மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.கலையரசி ஆகியோர்கள் உடனிருந்தனர்.