பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலரின் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா அருமடல் கிராமத்தில் இன்று பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்செல்வன் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் பா.பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு மனுநீதி நாள் விழா முகாமில் பொதுமக்களிடமிருந்து 20 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 11 மனுக்கள் ஏற்பும், 9 மனுக்களுக்கு உரிய விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி இன்றைய நிகழ்ச்சியில் 122 பயனாளிகளுக்கு ரூ.61.68 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.