Compulsory educational right: Admission to vacancies on June 20
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி நுழைவுநிலை வகுப்பிற்கு 25 சதவீத ஒதுக்கீட்டில் நிலுவையாக உள்ள காலியிடங்களுக்கு ஜுன் 20 ல் சேர்க்கை
பெரம்பலூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் க.முருகன் விடுத்துள்ள தகவல் :
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி சிறுபான்மையற்ற தனியார் சுய நிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான சேர்க்கை இணைய வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சேர்க்கைக்கான குழந்தைகளை தெரிவு செய்யும் பணி 31.05.17 அன்று அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்றது.
தெரிவு செய்யப்பட்ட குழந்தைகளில் ஒரு சிலர் சேர்க்கைக்கு வராத காரணத்தால் நிலுவையாக உள்ள காலியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட பள்ளிகளில் 20.06.17 அன்று காலை 10.00 மணிக்கு துறை சார்ந்த பிரதிநிதி முன்னிலையில் சேர்க்கை வழங்கப்பட உள்ளது.
எனவே ஏற்கனவே இணைய வழியாக விண்ணப்பித்து சேர்க்கைக்கு தெரிவு செய்யப்படாத குழந்தைகளின் பெற்றோர்கள் 20.06.17 அன்று காலை 10.00 மணிக்கு சம்மந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று காலியாக உள்ள இடத்தில் சேர்க்கை பெற்றுக்கொண்டு பயன்பெறலாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.