Cow killed by electricity near Perambalur
பெரம்பலூர் மாவட்டம், குன்னம், அண்ணா நகரை சேர்ந்த பெரியசாமி (55), என்பவருக்கு சொந்தமாக பசு மாடு இருந்த நிலையில், பெரம்பலூர் -அரியலூர் சாலையில், குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து, அண்ணாநகர் வரை சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின் விளக்குகளுக்கு பதிக்கப்பட்டுள்ள புதைவட மின்கம்பியில் மழைநீர் ஈரம் காரணமாக அவ்வப்போது மின்கசிவு ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தாக கூறப்படுகிறது. அதனை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், நேற்று அப்பகுதியில் திடீரென பெய்த மழையினால் ஏற்பட்ட ஈரம் காரணத்தால், ஏற்பட்ட மின் கசிவால் அப்பகுதியை நேற்றிரவு பசுமாடு கடந்து சென்றது. மின்கசிவு வழியாக மின்சாரம் தாக்கி பசுமாடு உயிர் இழந்தது.
இதன் மதிப்பு ரூ. 55ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலின் பேரில், விஏஓ.,மணிகண்டன் மற்றும் வருவாய்த்துறையினர், குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் உயிர்ப்பலி மின்கசிவை சரிசெய்ய ஊராட்சி நிர்வாகமும், மின்வாரியமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.