Details of rainfall were recorded in the perambalur district
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இன்று காலை 8 வரை பதிவான மழையளவு விவரம் (மி.மீ) :
பெரம்பலூர் 22, வேப்பந்தட்டை 12, தழுதாழை 52, செட்டிக்குளம் 14, பாடாலூர் 5 என மொத்தம் 105 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 21 மி.மீ.
இன்று காலை வரை பெய்த மழையால் விவசாயிகள் மானாவரி பயிர் சாகுபடியில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆடிப்பட்டத்தில் பயிரிட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.