Disabilities apply for unemployment allowance – Employment Office
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:
அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழக அரசின் சிறப்புத் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வழங்கப்படுகிறது.
இந்த உதவித்தொகை பெற விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண் பார்வையற்றோர்கள் இதற்குரிய படிவம் பெற்று 30.11.2016-க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தின் பயன்பெற விரும்புவோர், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 30.09.2015 அதற்கு முன்னதாக பதிவு செய்தவராக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள் 30.09.2016 தேதியில் 45 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது.
மற்ற வகுப்பினர்கள் அதே போன்று 40 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது. மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலைதூரக் கல்வி பயிலுபவராக இருக்கலாம்.
மனுதாரர்கள் தங்களுடைய அசல் கல்விச் சான்றுகள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மாற்றுத்திறனாளிகளுக்குரிய அடையாள அட்டை ஒரு புகைப்படம் மற்றும் இம்மாவட்டத்தில் உள்ள தேசீயமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் தங்கள் பெயரில் துவங்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகத்துடன் 30.11.2016-க்குள் விண்ணப்பம் பெற்று அங்கேயே பூர்த்தி செய்து விண்ணப்பம் சமர்ப்பித்து உதவித்தொகை பெறலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.