drinking water not proper provided by the municipality to protest, perambalur 6th Ward people road blocked

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு குளோபல் நகர் பகுதி மற்றும் விவேகானந்தர் தெரு பொதுமக்கள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்ய படவில்லை என்றும் ஆனால், அருகில் உள்ள வார்டுகளுக்கு நகராட்சி நிர்வாகம் தண்ணீர் வினியோகம் செய்து வருகிறது என்றும்,

தங்கள் பகுதிக்கும் முறையாக தண்ணீர் வழங்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் இன்று மாலை காலிகுடங்களுடன் பெரம்பலூர் எளம்பலூர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி உதவி பொறியாளர் வேல்முருகன் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி, முறையாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில், மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!