Electrician attacked and killed by electricity near Namakkal
நாமக்கல் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள பேளுக்குறிச்சியை சேர்ந்தவர் கண்ணன் (40). இவர் எலக்ட்ரீஷியன் பணியாற்றி வந்தார். இவருக்கு வளர்மதி (35) என்ற மனைவியும், 11 வயதில் மகள் மற்றும் ஒன்பது வயதில் மகன் உள்ளனர். இவர்கள் என்.புதுப்பட்டியில் வசித்து வருகின்றனர். நாமக்கல் – மோகனூர் ரோட்டில் ஓட்டல் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கு தற்காலிக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
சம்பவத்தன்று மின் இணைப்பு பெட்டி பொருத்தப்பட்ட கம்பம் சாய்ந்தது. அதை தூக்கி நிறுத்தம் பணியில் கண்ணன் மற்றும் சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மீட்டர் பாக்சை இழுத்து கட்டும்போது கண்ணன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.