அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் ப.மஞ்சுளாதேவி விடுத்துள்ள தகவல் :

ITI பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் 2016ம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மூலம் நடைபெற்றது.

ஒருசில பயிற்சி பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு காலஅவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயில விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் www.skilltraining.tn.gov.in, என்ற இணையதளம் மூலமாக 29.07.2016 முதல் 16.08.2016 க்குள் விண்ணப்பிக்கலாம.;

இப்படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்களுக்கு 14 வயதுமுதல் 40 வயதுவரையும், பெண்களுக்கு வயதுவரம்பு ஏதும் இல்லை. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடைசலர், இயந்திர வேலையாள், கம்மியர் மோட்டார் வண்டி, மின்சார பணியாளர், மெயின்டனன்ஸ் ஆஃப் சோலார் எக்யூப்மென்ட் , புட் புரொடக்ஷன் ஆகிய தொழிற்பிரிவுகளிலும்,

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பற்றவைப்பவர் தொழிற்பிரிவுகளிலும் பயிற்சியளிக்கப்படுகிறது.

இணையதளம் மூலமாக விண்ணப்பித்த நபர்களுக்கு 29.08.2016 மற்றும் 30.08.2016 ஆகிய தேதிகளில் பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கலந்தாய்வு நடைபெறும்.

மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள அரசுதொழிற்பயிற்சி நிலையம் பெரம்பலூர், ஆலத்தூர் முதல்வரை அணுகி பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!