Farmer killed by lightning near Perambalur!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன் முருகன் (45),விவசாயி. இவர் இன்று வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, கோடைமழை பெய்தது. திடீரென இடி மின்னல் ஏற்பட்டது. மின்னல் விவசாயி முருகனை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த வருவாய் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.