hostel-room1 பெரம்பலூர் ஆட்சியர் க.நந்தக்குமார் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் 7 பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதிகளும், 4 பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதிகளும், 9 மிகப் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதிகளும், 6 மிகப்பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதிகளும், ஒரு மிகப்பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர் விடுதியும், 3 மிகப் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதிகளும், ஒரு மிகப்பிற்படுத்தப்பட்டோர் தொழில்நுட்ப கல்லூரி மாணவியர் விடுதியும் ஆக மொத்தம் 31 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ, மாணவியர்களும் கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகள், விடுதிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐடிஐ படிப்புகளில் பயிலும் மாணவ – மாணவியர் சேரத் தகுதியுடைவர்கள் ஆவர். பி.வ, மி.பி.வ., சீர்மரபினர் விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

அனைத்து விடுதி மாணவ – மாணவியருக்கு உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மணவ, மாணவியருக்கு 4 செட் பாலியெஸ்டர் காட்டன் சீருடைகள் வழங்கப்படும். 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.

விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்:

பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமலும், இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்த பட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.

தகுதியுடைய மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் – காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30.6.2016-க்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலத்தில் 15.7.2016-க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கும்பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் யாதும் அளிக்கத் தேவையில்லை. தேர்வு செய்யப்பட்டு விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.

ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கண்ட விடுதிகளில் பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த தகுதியுடைய மாணவ, மாணவிகள் சேர்ந்து பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!