பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடைவெளி விட்டு தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது.
Rain-Falling இந்நிலையில் நேற்று இரவும் பெரம்பலூர் நகரிலும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும், கோனேரிபாளையம், எளம்பலூர், எசனை, லாடபுரம், அம்மாபாளையம், வடக்குமாதவி, சிறுவாச்சூர் அயிலூர், சிறுகன்பூர், சுற்றுப்புற கிராமங்களிலும் சாரல் மழை பெய்தது.

சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக பெய்த மழை நீடித்தது. இதனால் தட்ப வெப்பநிலை மாறி குளிர்ந்த காணப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், வைகாசி பட்டத்தில், வெங்காயம், நிலக்கடலை, கருணை கிழங்கு, மஞ்சள், கரும்பு, வாழை, சவுக்கு, மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடியில் ஈடுபட்டிருக்கும் உழவர்களுக்கு, தண்ணீர் பாய்ச்சும் வேலை மிச்சம் என்பதால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆடிப்பட்டத்தில் விதைக்கப்படும், நெல், பருத்தி மக்காச் சோள பணிகளுக்கான விதைப்பு பணிக்கான முன்னேற்பாடுகளில் உழவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

பெரம்பலூரில் நேற்றிரவு பெய்த மழையளவு விவரம் (அளவு : மி.மீ) : பெரம்பலூர் 21, செட்டிக்குளம் 32, வேப்பந்தட்டை 11, தழுதாழை 3, பாடாலூர் 5 என மொத்தம் 72 மி.மீ மாவட்டததின் சராசரி மழையளவு 14.4 மி.மீ. ஆகும்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!