In Perambalur villages in the district will be held tomorrow, AMMA Scheme Camp
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (அக்14) அம்மா திட்ட முகாம் நடைபெறும் வருவாய் கிராமங்களின் விபரம் குறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் வட்டத்தில் மேலப்புலியூர் (கி), வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட திருப்பெயர், வேப்பந்தட்டை வட்டத்தில் பில்லங்குளம் வருவாய் கிராமத்திற்குட்பட்ட அய்யனார்பாளையம், குன்னம் வட்டத்தில் பெருமத்தூர் (வ) வருவாய் கிராமத்திற்குட்பட்ட மிளகாநத்தம் மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் சிறுகன்பூர் (வ) ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளன.
பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான அம்மா திட்ட முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும், என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது,