ITI பெரம்பலூர் அரசினர் தொழிற்பயிற்சி முதல்வர் ப.மஞ்சுளாதேவி தெரிவித்துள்ளதாவது;

அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்குரிய ஆகஸ்ட் 2016ம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் (Online) மூலமாக 27.05.2016 முதல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான வயதுவரம்பாக 14 வயது முதல் 40 வயது வரையும் பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை. மேலும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொருத்துநர், கடைசலர், இயந்திர வேலையாள், கம்மியர் மோட்டார்வண்டி, மின்சார பணியாளர், மெயின்டனன்ஸ் ஆஃப் சோலார் எக்யூப்மென்ட; ஃபுட் புரொடக்ஷன் ஆகிய தொழிற்பிரிவுகளிலும் மற்றும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பற்றவைப்பவர் தொழிற்பிரிவுகளிலும் பயிற்சியளிக்கப்படுகிறது.

எனவே மேற்கண்ட பிரிவுகளில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இணையத்தளம் மூலமாக வரும் ஜுன் 20 – க்குள் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
மேலும், விபரங்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை 9486063792, 04328 – 290590 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!