Job in Oman with 3 years of ITI and 10th standard Experience

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம், ஓமன் நாட்டிலுள்ள ஒரு முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய ஐடிஐ அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணிஅனுபவம் பெற்ற Electrical Technicians / ElectricalOH Lineman, Electricians தேவைப்படுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பணி அனுபவத்திற்கேற்ப ரூ,24,000- முதல் ரூ.37,000- வரை மாத ஊதியம் வழங்குவதுடன் விசா மற்றும் ஓமன் நாட்டின் சட்டதிட்டத்திற்க்குட்பட்ட இதரசலுகைகள் வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும். இப்பணிக்கான நேர்முகத் தேர்வு14.12.2019 மற்றும் 15.12.2019 காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-600032ல் நடைபெற உள்ளது.

நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள அடங்கிய விண்ணப்பம், அசல் கல்விச்சான்றிதழ், அனுபவச்சான்றிதழ், பாஸ்போர்ட் மற்றும் நகல்கள், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளம் வாயிலாகவும் www.omcmanpower.com, மற்றும் 044-22505886, 8220634389, 9566239685, 22502267 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!