Kaikalathur Public roadblock condemns panchayat administration for not distributing drinking water properly near Veppanthattai in Perambalur District

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூர் ஊராட்சியில், 1வது வார்டு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு கடந்த பல மாதங்களாக குடிநீர் பஞ்சாயத்து சார்பில் வினியோகம் செய்யவில்லை என்றும், ஆழ்துளை கிணறுகள், உடைப்பு ஏற்பட்ட தண்ணீர் வினியோகிக்கும் சீராமைக்காததை கண்டித்தும், இன்று காலை சுமார் 6.30 மணியளவில், பெரம்பலூர் – கள்ளக்குறிச்சி சாலையில் காலிகுடங்களுடன் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணிநேரம் நடந்த இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த கைகளத்தூர் போலீசார் மற்றும் வருவாய், ஊராட்சி துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி , பிரச்சனைக்கு உரிய தீர்வு கண்டு, உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தன் பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!