Last night’s rainfall in Perambalur district

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பொழிந்தது. இதனால், ஆடிப்பட்டத்தில் மக்காச்சோளம், கம்பு, பருத்தி உள்ளிட்ட மானாவரிப் பயிர் சாகுபடி செய்ய காத்திருக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.

நேற்றிரவு மழை சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் காற்றுடன் கூடிய மழை பெய்தது. காற்று வீசியதால் மாவட்டத்தின் பல இடங்களில மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விளம்பர பதாகைகள், மரக்கிளைகள் முறிந்து வீழ்ந்தன.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் (மி.மீ-ல்) : பெரம்பலூர் 19, செட்டிக்குளம் 79, வேப்பந்தட்டை 16, தழுதாழை 14, பாடாலூர் 37 என மொத்தம் 165 மி.மீ மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தின் இன்றைய சராசரி மழையளவு 33மி.மீ.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!