MCP Day in Perambalur District: Rs.5.39 crore Assistance to Welfare

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் காரியானூர் கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலரின், சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி 534 பயனாளிகளுக்கு ரூ.5.39 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வருவாய்த் துறை மூலம் 107 பயனாளிகளுக்கு ரூ.41,27,000- மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும்,

ஊரக வளர்ச்சித்துறை மூலம் 202 பயனாளிகளுக்கு ரூ.34340000- மதிப்பீட்டிலான பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கடன் மான்யமும், கூட்டுறவுத் துறை மூலம் 181 பயனாளிகளுக்கு ரூ.1,33,06,500- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும்,

கால்நடைத்துறை மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.1,500-மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலைத் துறையின் மூலம் 14 பயனாளிகளுக்கு ரூ.11,10,584- மதிப்பீட்டிலான வெங்காயம் மற்றும் சொட்டு நீ பாசனம் அமைத்தல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும்,

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.20,072- மதிப்பிலான விலையில்லா சலவைப் பெட்டிகளும்,

மகளிர் திட்டம் மூலம் 8 பயனாளிகளுக்கு ரூ.1,88,750- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் 7 பயனாளிகளுக்கு ரூ.35,656- மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும்,

வேளாண்மைத்துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.3,90,000- மதிப்பீட்டிலான சொட்டுநீர்; பாசனத்திற்கான கருவிகளும் என பல்வேறு துறைகளின் சார்பில் 534 பயனாளிகளுக்கு ரூ.5,39,12,062- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் அழகிhpசாமி மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அரசு பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!