Ordered of drinking water for 3 months by the collector of Perambalur: Public back petition

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் எளம்பலூர் ஊராட்சி மின்நகர் மற்றும் விஸ்தரிப்பு குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் தலைவர் சந்திரன், செயலாளர் ஆர்.முருகேசன், பொருளாளர் வி.பாலகிருஷ்ணன் மற்றும் சிபிஎம் பெரம்பலூர் ஆலத்தூர் வட்ட செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம் ஆகியோர் தலைமையில் 10 க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில் தங்களது பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து கடந்த 26.2.2018 அன்று ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்ததன் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாகவும் ஆனால் மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இதுநாள் வரை குடிநீர் வழங்க மறுத்து காலம் தாழ்த்திவருவதாகவும் மனுவில் தெரிவித்திருந்தனர்.

உடனடியாக குடிநீர் வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்படி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வரும் 7.6.2018 அன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!