People Block the road demanding proper distribution of drinking water near Perambalur

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு வழங்கப்படும் குடிநீர் வாரத்திற்கு ஒருமுறை தட்டுப்பாட்டுடன் வழங்கப்பட்டு வந்த குடிநீர் கடந்த ஒரு வார காலமாக வழங்கப்படவில்லை என தெரிகிறது.
தட்டுப்பாடின்றி முறையாக குடிநீர் வழங்கிட வேண்டுமென அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த 200க்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் மற்றும் வருவாய்த், ஊரக வளர்ச்சித் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!