Perambalur: Citizens block the road with empty jugs to demand drinking water in Vayalapadi
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள வயலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கீரனூர் கிராமத்தில் குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் வ. கீரனூர் பஸ் ஸ்டாப்பில் நடத்தினர்.
வ. கீரனூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கவில்லை என்றும், இதுகுறித்து வேப்பூர் பிடிஓ மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை சுமார் 9 மணியளவில் வ. கீரனூர் பஸ் நிலையத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெங்கடேசன் ஆகிய தலைமையில் பெண்கள் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் அகரம்சீகூர் – அரியலூர் சாலையில் சாமியனா பந்தல் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வேப்பூர் பிடிஓ செல்வகுமார், குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன், வயலப்பாடி விஏஓ ராஜலட்சுமி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் இரண்டு நாட்களில் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்சினையை சரி செய்து தருவதாக கொடுத்த உறுதியின் பேரில், சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 3 மணி நேரம் அகரம்சீகூர் பார்டர் – அரியலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.