Perambalur Collector Called for Nari Shakti Puraskar Award!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

நாரி சக்தி புரஸ்கார் விருது பெறுபவர்களுக்கு காசோலை ரூ.2 லட்சம் மற்றும் சான்றிதழ் வழங்கும் பொருட்டு, பெண்கள் பாலின விகிதத்தை உயர்த்த சேவை புரிந்த தனிநபர், குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துரு இணையதளம் மூலம் (www.awards.gov.in.), (www.wcd.inc.in) வரவேற்கப்படுகிறது. தனிநபர் எனில் 25 பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். நிறுவனங்கள் எனில் குறைந்தது 05 ஆண்டுகள் சேவை புரிந்து இருக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு, மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி 04328-296209 என்ற எண்ணை தொடர்புக் கொண்டு பயன் பெறலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!