Perambalur collectrate Public Grievances Day meeting: 522 petitions were delivered to the authorities and the public

பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : 522 மனுக்களை அதிகாரிகளிடம் கொடுத்தனர்.

perambalur-collector

பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

திங்கள்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர;க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர; திரு.க.நந்தகுமார; இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டு மனைப் பட்டா, உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 522 மனுக்களை அதிகாரிகளிடம் நேரிடையாக அளித்தனர்.

பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

மேலும், பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நாட்டின் வளர்ச்சியில் குழந்தை தொழிலாளர் அற்ற சமூகத்தின் பங்கு என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற 19 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் கேடயமும், சான்றிதழும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி, முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) முருகேஸ்வரி தொழிலாளர் ஆய்வாளர் பாலதண்டாயுதம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!