Perambalur: Electrocution at famous private electronics, home appliance showroom: Avoid loss of life as it is night time!

பெரம்பலூர் வெங்கடேபுரத்தில் இயங்கி வரும் பிரபல (சத்யா ஸ்டோர்ஸ்) எலக்ட்ரானிக்ஸ், ஹோம் அப்ளையன்ஸ் ஷோ ரூமில் கடையை மூடும் நேரத்தில் ஏற்பட்ட வெப்பத்தாலும், மின்சாரத்தாலும் கடையின் முன்புறம் தீ பற்றி எரியத் தொடங்கியது.

இதைக் கண்ட ஊழியர்கள், கடையை வெளியே வந்தனர். பின்னர், மின்சார வயர்கள் தீப்பற்றி எறியத் தொடங்கியது. தீ தடுப்பு மற்றும் போதிய பாதுகாப்பு வசதிகள் கடையில் இல்லாததால் ஊழியர்கள் தவித்து கொண்டு இருந்தனர். தீ மளமளவென முகப்பு அமைப்பட்டிருந்து பெயர் பலகையில் தீ கொழுந்து விட்டு எறியத் தொடங்கியது. அவ்வழியாக வந்த மக்கள் மற்றும் ஊழியர்கள் தீ கட்டுப்படுத்த முயன்றனர், ஆனால், முடியவில்லை. உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயனைணப்பு மற்றும் மீட்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும், மின்சாரமும் அப்பகுதியில் தடைப்பட்டது. முன்னதாக, அருகே இருந்து டிரான்ஸ்பார்மரிலும் தீப்பொறிகள் பறந்தன. மின்சாரம் மின்வாரிய பணியார்களால் அதிவேகமாக துண்டிக்கப்பட்டது.

கடை மூடும் நேரம் என்பதால், கஸ்டமர்கள் யாரும் இல்லை, பகல் நேரத்தில் மின்விபத்து நடத்திருந்தால் சூரிய வெளிச்சத்தில் தெரியாமல் போய் பெரிய அளவில் விபத்து ஏற்பட்டிருக்கும். நல்வாய்ப்பாக இரவு நேரம் என்பதால், தீ கொழுந்து எறிவது தெரியவந்தது.


பொதுமக்கள் அதிகமாக வரும் கடையில் பாதுபாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!