Perambalur: Grama Sabha meeting in the district; Collector’s information!
பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் ஆக.15 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ள என கலெக்டர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது:
கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து கிராம சபை உறுப்பினர்களும் தவறாது கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கண்டறிதல் வேண்டும். அரசு நலத்திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல் வேண்டும். அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிதல் வேண்டும். கிராம சபைக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்க அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II, ஜல் ஜீவன் திட்டம், இதர பொருட்கள் ஆகிய கூட்டப்பொருட்கள் பற்றி விவாதிக்க வேண்டும்.
அனைத்து துறை வாரியான அலுவலர்கள் தவறாது கிராம சபைக்கூட்டங்களில் கலந்து கொள்வதோடு, துறை தொடர்பான திட்டங்கள் பொதுமக்கள் நன்கு அறியும் வகையில் கூறிட வேண்டும். கிராம சபைக்கூட்டம் நல்ல முறையில் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள் மண்டல அலுவலர்களாக கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுதந்திர தினமான 15.08.2025 அன்று கிராம சபைக்கூட்டத்தில் கிராம சபா உறுப்பினர்களாகிய வாக்களர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கும், ஆக்கப்பூர்வமான ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சிகளின் இதரபொருட்கள் குறித்தும் விவாத்தித்திட அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.