Perambalur: Official language workshop and seminar; Collector’s information!

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்குத் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 09.09.2025 மற்றும் 10.09.2025 ஆகிய இரண்டு நாட்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொது மக்கள் குறைதீர் கூட்டரங்கத்தில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறவுள்ளது.

09.09.2025 அன்று மாவட்ட வருவாய் அலுவலரின் பயிலரங்கத் தொடக்க உரையைத் தொடர்ந்து பயிலரங்கத்தில் ஆட்சிமொழிச் சட்டம் வரலாறு, ஆட்சிமொழிச் செயலாக்கம் அரசாணைகள், மொழிபெயர்ப்பு கலைச்சொல்லாக்கம், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், மொழிப்பயிற்சி, கணினித் தமிழ் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. 10.09.2025 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆட்சிமொழிக் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. ஆட்சிமொழிக் கருத்தரங்கம் குறித்து அரசு அலுவலர்கள் கருத்துரை வழங்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பெரம்பலூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் செயல்படுவார். அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழித்திட்டச் செயலாக்கத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு அலுவலர்கள், பணியாளர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!