Perambalur: Special Grievance Redressal Day meeting for the differently-abled; Collector’s announcement!
பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு கலெக்டர் ச.அருண்ராஜ் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நாளை 23.07.2025 அன்று காலை 10.30 மணி முதல் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து துறைசார்ந்த அலுவலர்கள் கலந்த கொள்ள உள்ளனர். எனவே, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவைகளை கோரிக்கை மனுவாக கலெக்டரிடம் வழங்கி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.