Perambalur: Special MCP in Siruvachur: Rs.1.75 crore welfare assistance provide

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா சிறுவாச்சூர் கிராமத்தில் இன்று ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பால்வளத்துறை, தாட்கோ, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட பல துறைகள் சார்ந்த திட்டங்கள் குறித்தும், இத்திட்டங்கள் மூலமாக பொதுமக்கள் பயன்பெறுவதற்குண்டான வழிமுறைகள் குறித்தும் அலுவர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலையில் இருந்து (சிறுவாச்சூர் ஆர்ச்) மதுரகாளியம்மன் கோவில் வரை 1.2 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இன்றைய சிறப்பு மனுநீதி நாள் முகாமில் பல்வேறு துறை வாயிலாக 155 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 75 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

மேலும், இன்றைய சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழாவில் 219 மனுக்கள் பெறப்பட்டு, தகுதியுடைய 122 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களால் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

பல்வேறு துறைகளின் சார்பில் 155 பயனாளிகளுக்கு ரூ.1,75,78,011 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!