pillankulam Village special manuniti camp
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட பில்லங்குளம் கிராமத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நடைபெற்றது.
இன்று நடைபெறும் சிறப்பு மனுநீதி நாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களிடமிருந்து 727 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 55 மனுக்களுக்கு உடனடி தீர;வும், 226 மனுக்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டது. 446 மனுக்களுக்கு உரிய விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி இன்றைய நிகழ்ச்சியில் 263 பயனாளிகளுக்கு ரூ.3.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளன.
இக்கூட்டத்தில் அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.