Private educational institution vehicles are being conducted by the Department of Transport at Perambalur today.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு விதிமுறைகளுக்குள் (பள்ளி பேருந்து வாகன சிறப்பு விதிகள் 2012ம் ஆண்டுப்படி) உட்பட்டு இயக்குவதற்கு தகுதியற்ற தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு சொந்தமான வாகனங்களுக்கு முதற் கட்ட தணிக்கை நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பெரம்பலூர் மாவட்ட காவல்துறை ஆயுதப்படை வளாகத்தில் வாகனங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகளை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில இன்று அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில், தனியார் பள்ளி, கல்லூரிக்கு சொந்தமான வாகனங்களில் அவசரகால வெளியேறும் வழி, பள்ளி மாணவ, மாணவிகள் பாடப்புத்தக பையை வைக்க தனி வசதி, எளிதில் பேருந்தில் ஏறும் வகையில் படிக்கட்டின் உயரம், வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி, பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.

இதில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 345 பள்ளி வாகனங்களில் இன்று முதற்கட்டமாக சுமார் 200 வாகனங்கள் இன்று தணிக்கை செய்யப்பபட உள்ளன. மறு கட்ட தணிக்கை மற்ற வாகனங்களுக்கும் நடைபெறும். குறைபாடு உள்ள வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, குறைகள் சரி செய்தபின் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் (பொ) ஜெயதேவராஜ் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, வட்டார போக்குவரத்து அலுவலர் (பொ) ஜெயதேவராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செல்வராஜ், பெரியசாமி உள்பட போக்குவரத்துத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர். மேலும், இந்த ஆய்வுக்குழு உறுப்பினர்களாக உள்ள வருவாய்த்துறை, காவல் துறை, போக்குவரத்து துறையினர் பலர் கலந்து கொண்டனர். மேலும், பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை சார்பில் விபத்தில் சிக்கியவர்கள் மீட்பதும், உரிய முதலுதவி செய்வது மற்றும் விபத்தால் வாகனத்தில் தீ ஏற்பட்டால் அணைப்பது மற்றும் பயிற்சியும் தீயணைப்பு அலுவலர் பால்ராஜ் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் பயிற்சி அளித்தனர்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!