provide drinking water near in Perambalur the road blockade demanding the public with empty pots!

பெரம்பலூர், பிப்.24-

பெரம்பலூர் அருகே குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் !

பெரம்பலூர் அருகே குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் பொம்மனப்பாடி கிராமத்தில் குடிநீர் வழங்க கோரி அக்கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொம்மனப்பாடி கிராமத்தில் போதியளவு குடிநீர் கிணறுகளில் இல்லை. இதனால் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. குடிதண்ணீருக்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பாதிப்படைந்த ஊர் பொது மக்கள் மற்றும் இளைஞர், இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் சென்று சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களுக்கான மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியில் ஏற்றப்பட்ட குடிநீர் அருகில் உள்ள வயலுக்கு பாய்ச்சியதாகவும், அதற்கு புகார் செய்தும் ஊராட்சி மன்றத்தில உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.

பேச்சு வார்த்தையின் முடிவில் முறையாக குடிநீர் வினியோகம் செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் செட்டிக்குளம் – பெரம்பலூர் சாலையில் சுமார் 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் பொதுமக்கள் ஒரு மணி நேர கால தாமதத்திற்கு பின்பே உரிய அலுவல்களுக்கு சென்றடைந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!