provide drinking water to the Perambalur municipality requesting the public road blockade to protest!

பெரம்பலூர் நகராட்சியை கண்டித்து குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் தண்ணீர் வண்டிகளை மறித்து சாலை மறியல் !

பெரம்பலூர் நகராட்சியின் 5 மற்றும் 6 வார்டு பகுதிகளில் குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் தண்ணீர் வண்டிகளை மறித்து சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது.

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. குடிதண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பாதிப்படைந்த பொது மக்கள் மற்றும் இளைஞர்கள், சிறுவர்கள், இன்று காலை9 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், அதிகாரிகள் பொதுமக்களிடம் சென்று சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், பொதுமக்கள் சாலைமறியலை கைவிட முன்வரவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாலைமறியல் நடந்த போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை என்றும், வாரத்திற்கு இரு முறையாவது குடிநீர் வினியோகம் செய்வதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், வாரத்திற்கு ஒரு நாள் கூட தண்ணீர் வழங்காமல் அலட்சியமாக இருப்பதாக தெரிவித்து அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.

பேச்சு வார்த்தையின் முடிவில் முறையாக குடிநீர் வினியோகம் செய்வதாக உறுதி அளித்ததன் பேரில், பொதுமக்கள் தண்ணீர் வண்டிகளை விடுவித்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் எளம்பலூர் – பெரம்பலூர் சாலையில் சுமார் 1மணி நேரம் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!