public grevence, other stopped for Local body Elections
உள்ளாட்சி தேர்தல் காரணமாக பொது மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டில் வரும் அக்., 17 மற்றும் 19 ஆகிய 2 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற இருப்பதால், தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வருவாய் கிராமங்களில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் அம்மா திட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் தலைமையில் மாதந்தோறும் நடைபெறும் மனுநீதி நாள் சிறப்பு முகாம்கள், மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், விவசாய கோரிக்கை நாள் கூட்டம் மற்றும் பிற மக்கள் தொடர்புடைய குறை தீர்க்கும் கூட்டங்கள் ஆகியவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த பின்னர் இச்சிறப்பு முகாம்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறும் நாள் குறித்த தகவல் பின்னர் தெரிவிக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.