Public grievance redressal camp related to food supply: Perambalur Collector information!

பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம், பெரம்பலூர் வட்டம், மேலப்புலியூர் கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை கிராமத்தில், , மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையிலும், குன்னம் வட்டம், பென்னக்கோணம் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், தெரணி கிராமத்தில், உதவி ஆணையர் (கலால்) தலைமையிலும் 09.03.2024 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது.

மேற்படி முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான, குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு, கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்:


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!