Public Grievances and Day Camp: Namakkal collector welfare payments provided to persons with disabilities.

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 31 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரியத்தில் வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மொத்தம் 300 மனுக்கள் வரப்பெற்றன.

அதனை சம்மந்தப்பட்ட அலுவரிடம் வழங்கி உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத் திறனாளிகளை ஆட்சியர் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மனவளர்ச்சி குன்றிய3 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமாணீப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.ஆயிரத்து 500 வீதம் ரூ.54 ஆயிரம் பெறுவதற்கான உத்தரவினையும், ரூ. 7 ஆயிரத்து 500 மதிப்புள்ள மூளை முடக்குவாத சிறப்பு நாற்காலி 2 பேருக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பிலும், ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள எழுத்தை பெரிதாக்கி காட்டும் கருவி மேக்னிபையர் ஒருவருக்கும், ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள அதிரும் மடக்கு குச்சி 2 பேருக்கு ரூ. 6 ஆயிரம் மதிப்பிலும், வங்கி கடன் மானியம் ஒருவருக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்பிலும், 28 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகளையும் என மொத்தம் 31 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.97 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் டிஆர்ஓ பழனிச்சாமி, சமூக பாதுகாப்பு திட்டம் துணை ஆட்சியர் துரை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!