R.T. Ramachandiran MLA provided financial assistance to Rs. 50 thousand to Medical College Student For surgery!

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது சுமார் 50), கல் உடைக்கும் தொழிலாளி, இவரது மகன் அருண் (வயது 24). வெளிநாட்டில் (ஜார்ஜியா) எம்.பி.பி.எஸ் இறுதி ஆண்டு படித்து முடித்த நிலையில் 2 கிட்னிகளும் செயல் இழந்தன. இந்நிலையில் அருணை படிக்க வைக்க, வங்கியில் கல்விக் கடன் கிடைக்காததால், அவரது குடும்பத்தினர் வீட்டு சொத்துகளை விற்றும், அடமானம் வைத்தும், வட்டிக்கு வாங்கியும் படிக்க வைத்தனர். அந்த சுமையில் இருந்து மீள்வதற்குள், மாணவன் அருணுக்கு மாற்றுச் சிறுநீரகம் பொருத்த வேண்டும் என்பதால் அவரது தாய் தங்கமணி தானமாக கொடுக்க முன்வந்தார். பின்னர், திருச்சியில் உள்ள (அப்பலோ) தனியார் மருத்துவமனையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் அவரால் மருத்துவமனை நிர்வாகம் குறித்த கட்டணத் தொகையை அவரால் செலுத்த இயலாத நிலையில் தவித்து வந்தனர். இதனால், அவருக்கு தாயரிடம் இருந்து கிட்னி பொருத்தும் நாட்கள் தள்ளி போனது. நிலைமையை தெரிவித்து உதவி கோரியதன் பேரில், பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி. ராமச்சந்திரன், (அவருக்கு உடல் நிலை சரியில்லாத நிலையிலும்) அந்த மருத்துவக் கல்லூரி மாணவன் அருணுக்கு உதவ முன் வந்தார். அதன் பேரில் மாணவனின் தந்தை ஜெயராமனிடம் கட்சி சார்பில் தனது சொந்த நிதி ரூ. 50 ஆயிரத்தை ரொக்கமாக கொடுத்தார். அதனை மாவட்ட செயலாளரும் குன்னம் எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் சார்பில் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் கட்சியினர் முன்னிலையில் வழங்கினார். அதனை பெற்றுக் கொண்ட மாணவனின் தந்தை ஜெயராமன் நன்றி தெரிவித்துக் கொண்டார். அப்போது கட்சி பிரமுகர்கள், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சசிகுமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தங்க.பாலமுருகன், மாவட்ட தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பெருமாள், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய பொருளாளர் பன்னீர்செல்வம் , ஒன்றிய கவுன்சிலர் அருணாபாண்டியன் உள்ளிடட பலர் உடனிருந்தனர்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!