Rain for the 3rd day in Perambalur district: Farmers happy!
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக பருவ மழை பெய்து வருவதால், மானாவரி பயிர் சாகுபடி செய்த உழவர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் (மி.மீ-ல்):
பெரம்பலூர் 13, செட்டிக்குளம் 8, பாடாலூர் 13, அகரம் சீகூர், 84, லப்பைக்குடிக்காடு, 35, புதுவேட்டக்குடி 23, எறையூர், 62, கிருஷ்ணாபுரம் 50, தழுதாழை 37, வ.களத்தூர் 6, வேப்பந்தட்டை 59 என மொத்தம் 390 மி.மீ பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 35.45 மி.மீ.