Road blocking near Perambalur, denouncing officials who did not take action to supply drinking water

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தில் உள்ள 1வது வார்டு மக்கள் பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் குடிநீர் வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மக்கள் இன்று காலை அதிகாரிகளை கண்டித்து எளம்பலூர் – செஞ்சேரி புறவழிச் சாலையில் காலிக் குடங்களுடன் மறியிலில் ஈடுபட்டனர்.

அப்போது, ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த ஆழ்குழாய் கிணறு, தெருக் குழாய்களை சீரமைத்து தரக்கோரி பல முறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், தற்போது நிலவி வரும் வறட்சியின் காரணமாக குடிநீர் தேவைக்கு கடும் அவதியுற்று வருவதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!