Special Grievance Day Meeting for Disabled Persons in Perambalur District
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:
பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்திட அரசு ஆணையிடப்பட்டுள்ளதை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தனது தலைமையில் வரும் மார்ச்.02 அன்று காலை 10.00 மணிக்கு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. பயனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டு நேரில் அளிக்கலாம். இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஆவண செய்யப்படும். எனவே மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கலந்துகொண்டு பயன்பெற கேட்டுக் கொண்டுள்ளார்.