Special MCP Camp in Kadur, near Perambalur

பெரம்பலூர் : காடூர் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் முகாமில் பயனாளிகளுக்கு ரூ.67லட்சத்து 70ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள காடூர் கிராமத்தில், மனுநீதி நிறைவு நாள் முகாம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நடைபெற்றது.

முகாமில் மாவட்ட ஆட்சி தலைவர் சாந்தா, காடூர் பகுதியை சார்ந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார் பின்னர் சம்மந்தப்பட்ட அலுவலர்களை அழைத்து விபரங்களை கேட்டறிந்து பொது மக்களிடம் எடுத்துக் கூறினார்.

அதனை தொடர்ந்து இம் முகாமில் 279 பயணாளிகளுக்கு ரூ. 67லட்சத்து 70ஆயிரத்து 335 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இம்முகாமில், குன்னம் வட்டாச்சியர் தமிழரசன், குன்னம் வட்ட வழங்கல் அலுவலர் புகழேந்திபெருமாள், வரகூர் வருவாய் ஆய்வாளர் கீதா, சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் மனோன்மணி, தலைமையிடத்து துணை தாசில்தார் சத்தியமூர்த்தி, வட்ட துணை ஆய்வாளர் குருமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், தோட்டகலைத் துறை, வேளாண்மைத் துறை உட்பட அனைத்து துறை அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!