Special Redressal Meeting for Disabled Persons in Tiruchengode: Namakkal Collector inform
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பு :
நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 21ம் தேதி காலை 10 மணிக்கு திருச்செங்கோடு ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு திருச்செங்கோடு ஆர்டிஓ முன்னிலை வகிக்கிறார். இதில் திருச்செங்கேர்டு கோட்டதைச்சார்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தொடர்பாக மனு அளித்து உரிய நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.