தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ப.மஞ்சுளாதேவி விடுத்துள்ள தகவல் :

அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு உரிய ஆகஸ்ட் 2017ம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

விண்ணப்பிக்க விரும்பும் ஆண்கள் 14 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை.

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொருத்துநர், இயந்திர வேலையாள், மின்சார பணியாளர், மெயின்டனன்ஸ் ஆஃப் சோலார் எக்யூப்மென்ட் ஆகிய தொழிற்பிரிவுகளிலும் மற்றும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பற்ற வைப்பவர் தொழிற்பிரிவுகளிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழக அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினி, சீருடை, மிதிவண்டி, காலணி, வரைபடக் கருவிகள், இலவச பஸ் பாஸ், பாட புத்தகங்கள் மற்றும் கல்வி ஊக்கத் தொகை மாதந்தோறும் ரூ.500 பணம் ஆகியவை வழங்கப்படும் மேலும் பயிற்சி மூலம் ஓரே நேரத்தில் மத்திய மாநில அரசு சான்றிதழ்கள் பெற்றுத்தரப்படும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் இணையத்தளம் மூலமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம் விண்ணப்பிப்பதற்கு கடைசிநாள் 31.05.2017 ஆகும்.
மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை அணுகவும்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!