The Arumbavoor big lake is full of happiness after two years

பெரம்பலூர் மாவட்டத்தில் , ஓகி புயல் தாக்கத்தால் நேற்று முதல் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பச்சைமலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக அரும்பாவூர் பெரிய ஏரிக்கு நீர்வரத்து அதிகமானது. இன்று அதிகாலை முதலே பெரிய ஏரி நிரம்பி வழிந்தோட தொடங்கியது. மேலும், இந்த ஏரி மூலம் பாசனம் விவசாயிகள் மற்றும் அரும்பாவூர் சுற்று வட்ட விவசாயிகள், அப்பகுதி மக்கள், இரண்டு ஆண்டுக்கு பின்னர் ஏரி நிரம்பியதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் (மி.மீ) : பெரம்பலூர் 32, வேப்பந்தட்டை 60, செட்டிகுளம்-57, தழுதாழை 56, பாடாலூர் 70, என மொத்தம் 275.00 மி.மீ மழை பதிவானது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 55 மி.மீ ஆகும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!