The day after tomorrow in Namakkal is the former soldiers squeeze: Collector Asia Mariam Info

நாமக்கல்லில் நாளை முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் அவர்தம் விதவையர்கள் மற்றும் படைவீரர்களின் குடும்பத்தார்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நாளை 24ம் தேதி புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை வகிக்கிறார். எனவே நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அவரைச் சார்ந்தோர்கள் மற்றும் படைப்பணியில் உள்ள படை வீரர்களின் குடும்பத்தார்கள் தங்களின் கோரிக்கைகளை இரண்டு நகல்களில் விண்ணப்பங்களாக எழுதி மாவட்ட கலெக்டரிடம் நேரில் வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!