பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா நன்னை(கி) கிராமத்தில் இன்று சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் ம.சந்திரகாசி முன்னிலையில் கலெக்டர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை, வருவாய்த் துறை, பிறபடுத்தப்பட்டோh; மற்றும் சிறுபான்மையினா; நலத்துறை, தோட்டக்கலைத்துறை, புதுவாழ்வுத்திட்டம் உள்ளி;ட்ட அனைத்து துறைகளின் உயர;அலுவலர;களும் தங்கள் துறைசார;ந்த திட்டங்கள் குறித்தும், இத்திட்டங்கள் மூலமாக பொதுமக்கள் பயன்பெறுவதற்குண்டான வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர;.
சிறப்பு மனுநீதி நாள் விழாவில் பொதுமக்களிடமிருந்து 944 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 15 மனுக்கள் ஏற்பும், 31 மனுக்கள் நிராகரிப்பும், 898 மனுக்களுக்கு உரிய விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி இன்றைய நிகழ்ச்சியில் 482 பயனாளிகளுக்கு ரூ.3.43 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பல்வேறு துறைகள் சார்பில் வழங்கப்பட்டது.