The fodder for Sale in Namakkal

நாமக்கல் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கால்நடைகளுக்கான அடர்தீவனம் விற்பனைக்கு உள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் டாக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாமக்கல் திருச்சி ரோட்டில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரி வளாகத்தில் மாடு, ஆடு மற்றும் நாட்டுக் கோழிகளுக்கு தரமான அடர் (கலப்பு) தீவனம் 50 கிலோ மற்றும் 5 கிலோ பைகளில் பண்ணையாளர்களின் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடை உணவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவரை தொடர்பு கொண்டு அறியலாம். பண்ணையாளர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயனடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!