The Government’s ITI apprenticeship training camp at trichy

பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மஞ்சுளாதேவி விடுத்துள்ள தகவல் :

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 23.03.2017 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 05.30.மணி வரை வேலைபழகுநா; பயிற்சிமுகாம் (அப்ரண்டீஸ்) நடைபெற உள்ளது.

அன்றைய தினம் 80க்கும் மேற்பட்ட பிரபலமான முன்னனி நிறுவனங்கள் கலந்துகொள்ளவுள்ளன. எனவே, அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியை முடித்த அனைத்து பிரிவு மாணவ – மாணவிகள் இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இப்பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர் அருகில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களை அணுகி தங்கள் விருப்பத்தினை 14.03.2017க்குள் முன் பதிவு செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேலும், விபரங்களுக்கு அருகிலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களை தொடர்புகொள்ளுமாறு இதன் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!