The issue of transferring money: at least half of the crowd who attended the meeting Grievances of collectorate
பணத் தட்டுப்பாடு விவகாரம் : மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டத்திற்கு வருகை தரும் மக்கள் கூட்டம் பாதியாக குறைந்தது
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடப்பது வழக்கம். அது போன்று இன்றும் நடந்த
இக்கூட்டத்திற்கு, பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா, உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 268 பேர் மட்டுமே மனு கொடுத்தனர். இது வழக்கம் போல் நடக்கும் குறைதீர்கூட்டத்திற்கு வருகை புரிபவர்களின் எண்ணிக்கையில் பாதியாகும். ஏனென்றால், பெரும்பாலான மக்கள், தங்களிடம், கையிருப்பில் உள்ள பணத்தை மாற்றுவதற்கு வங்கிக்கு சென்று உள்ளதால் கூட்டம் குறைவாக காணப்பட்டது.