The library patron enrollment and story telling happened in Perambalur


பெரம்பலூர் மாவட்ட நூலகத்துறையின் கீழ் செயல்படும் மேற்கு வானொலித்திடல் அருகே உள்ள கிளை நூலகத்தில் புரவலர் சேர்க்கை மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட நூலக அலுவலர் சி.அசோகன் தலைமை வகித்தார். கிளை நூலகர் சிவகாமிசுந்தரி அனைவரையும் வரவேற்றார். ஆர்.அசோக்குமார், பி.செந்தில்குமார், பொறியாளர் கே.சிவராஜ் ஆகிய மூன்று பேர் ரூ 10 ஆயிரம் வழங்கி கொடையாளர்களாகவும் ரூ ஆயிரம் செலுத்தி 6 பேர் புரவலர்களாகவும் சேர்ந்தனர்.

பின்னர் குரும்பலூர் பாரதிதாசன் கல்லூரி பேராசிரியர் சந்திரமவுலி பள்ளி மாணவ மாணவிகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சியில் கதைகளை எடுத்துரைத்தார்.

முதல் நிலை நூலகர் இரா.சந்திரசேகர் 2ஆம் நிலை நூலகர் ஆ.செல்வராஜ் பள்ளி தலைமை ஆசிரியை மு.கீதா வாசகர் வட்ட தலைவர் எழிலரசி, உடையார் டீ ஸ்டால் முத்துக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொளக்காநத்தம் கிளை நுலகர் ராஜா நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!