Thuraimangalam people blocked the road demanding water with empty pots!


பெரம்பலூர் நகராட்சியை கண்டித்து குடிநீர் வழங்க கோரி துறைமங்கலம் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் !

பெரம்பலூர் நகராட்சியின் துறைமங்கலம் நேரு நகர் (10 வது வார்டு) பகுதியில் குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் தண்ணீர் வண்டிகளை மறித்து சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது.

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும், அப்பகுதியில் தண்ணீர் நீர்த் தேக்கத் தொட்டியில் நிரப்படும் தண்ணீரை வேறு பகுதிக்கு லாரி மூலம் எடுத்து செல்லக்கூடாது என்றும் கோரிக்கைகளை வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், அதிகாரிகள் பொதுமக்களிடம் சென்று சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையின் முடிவில் முறையாக குடிநீர் வினியோகம் செய்வதாக உறுதி அளித்ததன் பேரில், சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் எளம்பலூர் – பெரம்பலூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!